states

img

இமாச்சல் மேக வெடிப்பு - 50க்கும் மேற்பட்டவர்கள் மாயம்

இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் மேக வெடிப்பு காரணமாக 50க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகியுள்ளனர்.
இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி சிம்லா, மாண்டி மற்றும் குலு ஆகிய மாவட்டங்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்; 50க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, மாநில காவல்துறை, ஊர்க்காவல் படையினர் மற்றும் தீயணைப்புப் படையினர் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 
அதே போல், உத்தரகண்ட் மாநிலத்தில் நேற்று மாலை பெய்த மழையால் ஏற்பட்ட விபத்துக்கள் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக மாநில பேரிடர் மற்றும் தணிப்பு கட்டுப்பாட்டு மையம் தகவல் தெரிவித்துள்ளது.